Site icon My Public Journal

A tamil poem

I felt like writing a prayer in Tamil (slokam in tamil). I had shiva in mind when I wrote this, but it could apply to anyone.

ஒருவராக இருந்து, பலராகவும் இருந்து
காற்றாக, நீராக, நெருப்பாக, பூமியாக, ஆகாயமாக இருந்து
அவற்றுக்கு அப்பாற்பட்டவையாகவும் இருந்து
நீயாகவும் இருந்து, நானாகவும் இருந்து
என்னுள்ளும் இருந்து, என்னைச் சுற்றியும் இருந்து
எல்லாமாய் நிலைத்து நிற்கும் நீ
எனது சிந்தையிலும் செயலிலும்
நிலைத்திருக்கும்படி அருள்புரிய வேண்டும்
நிலைத்திருந்து, நீயே நான், நானே நீ என
அறிவொளியும் அருள வேண்டும்.

Exit mobile version